சூரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அடுத்து இரண்டு புதிய மருத்துவமனைகளை கொரோனா நோயாளிகளுக்காக மாற்றுவதாக முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, சூரத்தில் கொரோனா வைரஸ் குறித்த நிலைமையை ஆய்வு செய்த முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மாநில துணை முதல்வரான நிதின் படேல், செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜூன் 20 முதல் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து ஜூன் 29 முதல் சராசரியாக 200-க்கும் மேற்பட்டோர் கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல் ஊரடங்கிற்கு பின்னர் ஜவுளி மற்றும் வைர தொழிலாளர்களிடமிருந்து தான் அதிகபட்சமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுவதாக அறிவித்துள்ளார். மேலும் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை அடுத்து, சூரத்தின் புதிய சிவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்டெம் செல் மருத்துவமனை மற்றும் சிறுநீரக மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக மாநில அரசு 100 கோடி ரூபாய் செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கூடுதலாக சூரத்தில் 200 வென்டிலேட்டர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அவை ஓரிரு நாட்களில் வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனியார் மருத்துவமனைகள் தங்கள் படுக்கைகளில் 50% கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க ஒப்பு கொண்டதாகவும் கூறிய விஜய் ரூபானி, வைர மற்றும் ஜவுளி தொழில் செய்பவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கொரோனாவிற்கான விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விதிகளை மீறினால் சந்தைகள் உட்பட பலதும் மூடப்படும். ஏனெனில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் முதல் பொறுப்பு என்று கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…