கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் சுதந்திர தின ஸ்பெஷலாக வரலாற்றில் முதல் முறையாக இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் ஒளிரப்பட்டது.
இந்தியா தனது 74வது சுதந்திர தினத்தை நேற்று கொண்டாடியது. அந்த வகையில் கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் சுதந்திர தின ஸ்பெஷலாக வரலாற்றில் முதல் முறையாக இந்திய கொடியின் வண்ணங்களில் ஒளிரப்பட்டது. இந்தோ-கனடா கலைஞர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகின் இயற்கை அதியங்களில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியில் இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் பிரதிபலிக்கப்பட்டது.
இந்த காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது மேலும் டொராண்டோவின் சிட்டி ஹாலிலும் இந்தியாவின் தேசிய கொடி எழுப்பப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இவை அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் ஒட்டாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள துணை தூதரங்களிலும் கொடி ஏற்றப்பட்டது.
மேலும் ஒட்டோவா, வான்கூவர், கல்கரி மற்றும் பிராம்ப்டன் உள்ளிட்ட நாட்டின் பல நகரங்களில் கார்கள் மீது இந்திய கொடிகளை பறக்கவிட்டு பேரணிகளும் நடைபெற்றது. மேலும் இந்தோ – கனடா பொது சேவை ஓக்வில்லே தொகுதியின் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் கொள்முதல் அமைச்சரான அனிதா ஆனந்த் இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடினார்.
இந்த நிகழ்வுகள் கன்னடாவில் வசிக்கும் இந்திய மக்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…