உலக அளவில் புதிய கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் மட்டும் பதிவாகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பல நாடுகளில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரையில், தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். ஒரு பக்கம் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் மற்றும் படுக்கை தட்டுப்பாடுகள் காரண்மாகவும் பல நோயாளிகள் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், உலக அளவில் புதிய கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் மட்டும் பதிவாகிறது என்றும், இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 20% தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…