[file image]
19வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும்நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆசிய விளையாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 100 பதக்கங்களை கடந்து இந்தியா சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில், தற்போது ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது இந்தியா.
அதன்படி, பிலிப்பைன்ஸ்க்கு எதிரான போட்டியில் 3.5 – 0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று வெள்ளியை வென்றது அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் ஹரிகிருஷ்ணா பெண்டாலா அடங்கிய இந்திய அணி.
இதுபோன்று, பெண்கள் பிரிவில் ஹரிகா துரோணவல்லி, கோனேரு ஹம்பி, ஆர்.வைஷாலி, வந்திகா அகர்வால் மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஈரான் முதலிடத்திலும், பெண்கள் பிரிவில் சீனா தங்கம் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…