நெற்றியில் திலகமிட இந்தியருக்கு அனுமதி! – அமெரிக்க விமானப்படை!

Published by
பாலா கலியமூர்த்தி

அமெரிக்க விமானப்படையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வீரர்களுக்கு நெற்றியில் திலகமிடம் அனுமதி.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் சீருடையில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிவதற்கு அமெரிக்க விமானப்படை அனுமதி அளித்துள்ளது. அதாவது, இந்தியாவை சேர்ந்த தர்ஷன் ஷா என்பவர் அமெரிக்காவின் விமானப் படையில், வயோமிங் என்ற பகுதியில் உள்ள ஃஎப்இ வாரன் விமான படைத் தளத்தில் விமான படை வீரராக பணியாற்றி வருகிறார்.

தர்ஷன் ஷா பணியில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிந்து கொள்ள அமெரிக்க விமானப்படை அனுமதி அளித்துள்ளது. மதரீதியான விலக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து தர்ஷன் ஷா கூறுகையில், “நான் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன். திலகத்தை நெற்றியில் அணிவது சிறப்பு. வாழ்க்கையில் கஷ்டங்கள் மற்றும் சிரமங்களை கடந்து செல்வது எனது வழி. இது எனக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.

இந்த உலகில் நான் யார் என்பதைப் பற்றிய ஒட்டுமொத்த புரிதலையும் கொடுத்துள்ளது. நாம் எதைப் பின்பற்றுகிறோம் அல்லது நம்புகிறோம் என்பதற்காக நாங்கள் துன்புறுத்தப்படுவதில்லை. இந்த நாட்டுக்கு நான் விஸ்வாசமாக இருக்கிறேன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது இது என்றார்.

மேலும், டெக்சாஸ், கலிபோர்னியா, நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க்கில் உள்ள எனது நண்பர்கள் விமானப்படையில் இதுபோன்ற சம்பவம் நடந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்தி அனுப்புகிறார்கள் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

33 minutes ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

43 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

1 hour ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago