சமூக வலைத்தளமான முகநூலை லட்சக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். முகநூலின் மற்றோரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம். பயனாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று உள்ளது.
இந்த இரண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பி கொள்ளும் வசதி உள்ளது. முகநூலில் உள்ள நண்பர்களுக்கு மெசேஞ்சர் செயலி மூலமாக மெசேஜ் அனுப்பும் வசதி தற்போதும் இருந்து வருகிறது. இந்த மெசேஞ்சர் செயலியை பயன்படுத்தி மட்டுமல்லாமல் வாய்ஸ் கால் ,வீடியோ கால் பேசும் வசதி உள்ளது.
இந்நிலையில் ஃ பேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை திட்டமிட்டு உள்ளது.அதன் படி இனி இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பும் வசதியை தங்களுக்கு சொந்தமான மெசேஞ்சர் செயலி உடன் இணைக்க திட்டமிட்டு உள்ளது.அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவ்வாறு இணைக்கப்பட்டால் சமூக வலைத்தளங்களில் மிக பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் ஃ பேஸ்புக் நிறுவனம் தங்களின் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை இணைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இப்படி ஃ பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை ஆகியவற்றை இணைப்பதன் மூலம் பயனாளர்களை தங்களின் நிறுவனத்துடன் இணைப்பிலே வைத்து இருக்கலாம் என ஃ பேஸ்புக் நிறுவனம் கூறுகிறது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…