டிக் டாக் பிரபலங்களுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சேவை பகுதியில் வீடியோ பதிவிட அழைப்பு விடுக்கப்படவுள்ளதாம். மேலும், பிரத்யோகமாக வீடியோ வழங்கும் படைப்பாளிகளுக்கு நிதி உதவி அளிக்கவும் பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு அச்சறுத்தலாகவும் செயல்படுவதாக கூறி டிக் டாக் உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது இதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் செயல்பட்டு வரும் ரீல்ஸ் சேவையில் டிக் டாக் பிரபலங்களை ஈர்க்க ஒரு புதிய யுக்தியை கையாள உள்ளது. அதன்படி டிக்டாக்கில் அதிக பாலோவர்களை வைத்திருக்கும் டிக் டாக் பிரபலங்களுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சேவை பகுதியில் வீடியோ பதிவிட அழைப்பு விடுக்கப்படவுள்ளதாம். மேலும், பிரத்யோகமாக வீடியோ வழங்கும் படைப்பாளிகளுக்கு நிதி உதவி அளிக்கவும் பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
வளர்ந்து வரும் படைப்பாளிகளை வெளியே கொண்டு வருவதற்காகவும், இன்ஸ்டாகிராமில் புதிய நட்சத்திரங்களை உருவாக்கவும் இது உதவும் என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு, பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளை தொடர்ந்து நான்காவது நாடாக இந்தியாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சேவையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் அடுத்த மாதம் பேஸ்புக் நிறுவனமானது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…