இன்று சர்வதேச செஸ் தினம்..!இது குறித்து ஒரு பார்வை..!

Published by
Edison

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி சர்வதேச சதுரங்க (செஸ்) தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாக பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பொதுவாக இவை பிரெஞ்சு மொழியில் FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகின்றன.FIDE பிரான்சின் பாரிஸ் நகரில்1924 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி அமைக்கப்பட்டது.இந்த தினம் ஆண்டுதோறும் சர்வதேச சதுரங்க (செஸ்) தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

உலகில் உடல் வலிமையை அதிகரிக்க பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட,அறிவாற்றலை வளர்க்க உதவும் விளையாட்டுகள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.அவற்றில் முதன்மையானது சதுரங்க விளையாட்டு.இவை புராதன காலங்கள் முதல் இன்று வரை மதிக்கப்படுகின்றன.

சதுரங்க விளையாட்டு:

இது இருவர் விளையாடும் ஒரு விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம்.பொதுவாக,64 கட்டங்களும் கறுப்பு,வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.

மூளைக்கு வேலை :

சதுரங்க விளையாட்டு அதிர்ஸ்டத்தை நம்பி விளையாடும் விளையாட்டல்ல மாறாக மூளைக்கு வேலை தரும் ஒரு விளையாட்டாக உள்ளது.மேலும், இது ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட கருதப்படுகிறது.ஏனெனில்,செஸ் விளையாடுவதால் அறிவாற்றல் அதிகரிக்கும் என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

மேலும்,சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சதுரங்கம் விளையாட கற்றுத்தருவது அவர்களின் அறிவாற்றல் வளர பெரிதும் உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதனால்,ரஷ்யாவில்,4 வயதில் இருந்தே தனது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இந்த விளையாட்டை கற்றுத் தருகின்றனர்.

இதனையடுத்து,சதுரங்கம் விளையாடுவதால் முதியவர்களுக்கு நினைவாற்றம் குறையாமல் இருப்பதாக ‘தி நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆஃப் மெடிசின்’ (The new england journal of medicine) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த விளையாட்டு எங்கு தோன்றியது என பல்வேறு கருத்து வேறுபாடு நிலவினாலும்,இந்தியாவில் 6 ஆம் நூற்றாண்டில் இருந்து வந்த “சதுரங்கா” என்ற விளையாட்டுதான், இன்று உலகம் முழுவதும் பரவிய செஸ் விளையாட்டாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள சிறந்த செஸ் பிளேயர்கள் :

விஸ்வநாதன் ஆனந்த்,பென்டலா ஹரிகிருஷ்ணா,விடித்,பாஸ்கரன் ஆதிபன்,கிருஷ்ணன் சசிகிரன்,பரிமர்ஜன் நேகி,எஸ்.பி. சேதுராமன்,சூர்ய சேகர் கங்குலி,கொனேரு ஹம்பி,துரோணவள்ளி ஹரிகா,சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Published by
Edison
Tags: Chess Day

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

11 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

12 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago