ஈரான், அமெரிக்கா இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம்180 பேருடன் புறப்பட்டு சென்றது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே கீழே விழுந்து நொறுங்கியது.அதில் பயணிகள் , விமான ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் இருந்த 2 கருப்புப்பெட்டிகளை ஏற்கனவே கைப்பற்றி விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்நிலையில் விபத்து எப்படி நடந்தது என அறிய விரைவில் கருப்பு பெட்டியை ஆய்வு செய்யப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.மேலும் கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப்பெட்டியை விமானம் தயாரித்த போயிங் நிறுவனத்திற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ கொடுக்க முடியாது என திட்டவட்டமாக ஈரான் கூறியுள்ளது.
சர்வதேச விதிகளின்படி எந்த நாட்டில் விமானம் ஏற்பட்டாலும் அந்த நாடு தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் கருப்புப் பெட்டியை சோதனை செய்யும் வசதி அமெரிக்கா, பிரிட்டன் ஜெர்மனி போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…