கொரோனா தடுப்பூசி போடலையா…? சம்பளம் கட்…! எந்த நாட்டில் தெரியுமா…?

Published by
லீனா

கொரோனா தடுப்பு ஊசி போட தவறினால் அரசு அதிகாரிகளின் சம்பளத்தை ஜூலை மாதம் முதல் நிறுத்துமாறு பாகிஸ்தான் சிந்து மாகாண முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தற்போது அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க கூடிய ஒரு  ஆயுதமாக தடுப்பூசி தான் காணப்படுகிறது. எனவே அனைத்து நாடுகளும் மக்களை தடுப்பூசி போடுமாறு அறிவித்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில், இஸ்லாமாபாத்தில், கொரோனா தடுப்பு ஊசி போட தவறினால் அரசு அதிகாரிகளின் சம்பளத்தை ஜூலை மாதம் முதல் நிறுத்துமாறு பாகிஸ்தான் சிந்து மாகாண முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் முராத் அலி ஷா தலைமையில் கோவிட் -19 தொடர்பான மாகாண பணிக்குழுவின் கூட்டத்தின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜூன்-7ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மீண்டும் திறப்பதற்காக மாகாணத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக ஜுன் 5ம் தேதி வரை கால கெடு கொடுக்கப்பட்டிருந்தது.

சிந்து சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, மாகாணத்தில் இதுவரை 1,550,553 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1,121,000 பேருக்கு முதல் டோஸ் கிடைத்துள்ளது. மேலும் 4,29,000 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2,028 புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 92 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

38 minutes ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

1 hour ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

2 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

2 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

3 hours ago

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

4 hours ago