கொரோனா தடுப்பூசி போடலையா…? சம்பளம் கட்…! எந்த நாட்டில் தெரியுமா…?

Published by
லீனா

கொரோனா தடுப்பு ஊசி போட தவறினால் அரசு அதிகாரிகளின் சம்பளத்தை ஜூலை மாதம் முதல் நிறுத்துமாறு பாகிஸ்தான் சிந்து மாகாண முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தற்போது அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க கூடிய ஒரு  ஆயுதமாக தடுப்பூசி தான் காணப்படுகிறது. எனவே அனைத்து நாடுகளும் மக்களை தடுப்பூசி போடுமாறு அறிவித்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில், இஸ்லாமாபாத்தில், கொரோனா தடுப்பு ஊசி போட தவறினால் அரசு அதிகாரிகளின் சம்பளத்தை ஜூலை மாதம் முதல் நிறுத்துமாறு பாகிஸ்தான் சிந்து மாகாண முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் முராத் அலி ஷா தலைமையில் கோவிட் -19 தொடர்பான மாகாண பணிக்குழுவின் கூட்டத்தின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜூன்-7ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மீண்டும் திறப்பதற்காக மாகாணத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக ஜுன் 5ம் தேதி வரை கால கெடு கொடுக்கப்பட்டிருந்தது.

சிந்து சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, மாகாணத்தில் இதுவரை 1,550,553 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1,121,000 பேருக்கு முதல் டோஸ் கிடைத்துள்ளது. மேலும் 4,29,000 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2,028 புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 92 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

14 minutes ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

15 minutes ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

32 minutes ago

”எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும்” – அதிபர் டிரம்ப் புலம்பல்.!

வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…

1 hour ago

“ஓட விருப்பம் இல்லைனா சத்தமா ‘No’ சொல்லு”…கில்லை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…

1 hour ago

முதல் நாளே மிரட்டல்.., இங்கிலாந்தை கதறவிட்ட ஜெய்ஸ்வால் – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…

2 hours ago