விளக்கில் ஊற்றி வைத்த எண்ணெய் மீதமானால் அதனை என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றுவது நடைமுறையான செயல். அப்படி தீபம் ஏற்றும் பொழுது கடைபிடிக்க வேண்டியவைகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் ஏற்றும் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஏற்றுவது சகல சௌபாக்கியங்களும் வீட்டிற்கு வந்து சேரும். கோவிலில் ஏற்றும் விளக்கில் பஞ்ச தீப எண்ணெய் உபயோகிக்கலாம். மேலும், வீட்டில் இருக்கும் விளக்கில் ஒரு எண்ணெய் உடன் மற்றொரு எண்ணெய் சேர்த்து பயன்படுத்த கூடாது. தினமும் பூஜை அறையில் உள்ள பிரதான விளக்கான காமாட்சி விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றும் பொழுது நேரடியாக தீப்பெட்டி கொண்டு அதனை ஏற்ற கூடாது.
ஒரு தீபத்தை கொண்டு தான் பிரதான விளக்கை ஏற்ற வேண்டும். அதற்கு முதலில் ஏதேனும் அகல் அல்லது சிறு விளக்கில் தீபம் ஏற்றி விட்டு அந்த விளக்கை வைத்து பிரதான விளக்கை ஏற்ற வேண்டும். ஏற்றும் பொழுது விளக்கில் உள்ள திரியை நன்கு மேல்நோக்கி முறுக்கி வைத்தால் தீபம் நன்கு எரியும். மேலும் இதனால் எண்ணெய்யும் பச்சை நிறத்திற்கு மாறாது, திரியும் கருப்பாக மாறாது. முக்கியமாக விளக்கில் உள்ள எண்ணெய் பச்சை நிறத்திற்கு மாறக்கூடாது. அதற்கு முன்னரே விளக்கை நன்கு துலக்கி புது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
சிலர் அந்த பழைய எண்ணெய்யை எடுத்து வைத்து அதனையே மீண்டும் பயன்படுத்துவர். அவ்வாறு செய்வது தவறான செயல். சரி, பின்னர் இந்த பழைய எண்ணெய்யை எதற்கு பயன்படுத்தலாம் என்றால் வீட்டில் உள்ள கதவு, தாழ்ப்பாள் அல்லது இரும்பு சார்ந்த பொருளுக்கு அந்த எண்ணெய்யை துருப்பிடிக்காமல் இருக்க பயன்படுத்தி கொள்ளலாம். இரும்பு பொருட்களில் சனீஸ்வர பகவான் நிறைந்திருப்பதால் இந்த எண்ணெய்யை இதற்கு நீங்கள் பயன்படுத்துவதால் நன்மையே நிகழும்.
அல்லது அந்த பழைய எண்ணெய்யை பயன்படுத்த விரும்பாதவர்கள் ஏதேனும் பாதுகாப்பான இடத்தில் ஊற்றலாம். ஆனால் உங்களது வீட்டில் எந்த இடத்திலும் அதனை ஊற்ற கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். மேலும், விளக்கின் தீபம் தானாக துடிதுடித்து அணைய விடக்கூடாது. காற்றினாலோ அல்லது ஊதியோ அதனை அணைக்க கூடாது. விளக்கை மலையேற்றுவதற்கு மலரை பயன்படுத்த வேண்டும்.
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…
சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…