சித்தி-2 தொடரில் இனி முதல் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று வரலட்சுமி மறுத்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொடர் ராதிகாவின் சித்தி . சமீபத்தில் அதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது.அதில் நடித்து வந்த ராதிகா சமீபத்தில் தேர்தலில் மும்மரமாக ஈடுபட உள்ளதால் சித்தி-2 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது சித்தி-2 தொடரில் இனி ராதிகாவிற்கு பதில் யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.அதன்படி சித்தி-2 தொடரில் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் இனிமுதல் ரம்யா கிருஷ்ணன் அல்லது தேவயானி அல்லது மீனா நடிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது .அதன் பின் தற்போது சித்தி -2 சீரியலில் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் இனி முதல் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று உலா வருகிறது.இது குறித்து வரலட்சுமி தரப்பிலிருந்து கூறியுள்ளதாவது,சித்தி-2 தொடரில் தான் நடிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று கூறி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உண்மையில் சித்தி 2 தொடரில் இனி முதல் யார் நடிப்பார் என்பது சன் டிவி வாய் திறந்தால் தான் தெரிய வரும்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…