இஸ்‌ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் -முடிவுக்கு வந்த 11 நாள் தாக்குதல்

Published by
Dinasuvadu desk

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.கடந்த சில வாரங்களாக நடைபெற்ற தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியது.இரு தரப்பினரும் நடத்திய அத்தாக்குதலில் இதுவரை 200 க்கும் பேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்னர்.

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை தடை விதித்தது.இதன்காரணமாக,இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.இதுதான் இந்த 11 நாட்கள் நடைபெற்ற தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது.

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை இஸ்ரேல் தனது எல்லையில் வைத்துள்ள நவீன தடுப்பு ராக்கெட்கள் மூலம்  உள்ளே நுழைய விடாமல் தடுத்தது.அதையும் மீறி வந்ததில் இஸ்ரேலில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.இதில் கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது என “ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் ஊடக ஆலோசகர் தாஹர் அல்-நோனோ ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.இந்த காசா உடன்படிக்கைக்கு ஆதரவாக தனது பாதுகாப்பு அமைச்சரவை ஒருமனதாக வாக்களித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் கூறியது, ஆனால் செயல்படுத்தும் நேரம் இன்னும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.

கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.

Published by
Dinasuvadu desk
Tags: HamasIsrael

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

11 minutes ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

1 hour ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

1 hour ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

2 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

3 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

3 hours ago