தீ பிடிக்கும் வகையிலான பலுன்களை ஹமாஸ் அமைப்பினர் பறக்கவிட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாஹு அவர்களின் ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இடையே அடிக்கடி வான்வெளி தாக்குதல் மற்றும் பயங்கரவாத மோதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. இருப்பினும் கடந்த மாத இறுதியிலேயே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று இவர்களுக்கிடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. தற்போது இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கம் ஆட்சியை பிடித்துள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதுடன், நாப்தலி பென்னட் அவர்கள் இஸ்ரேலின் புதிய பிரதமராக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் இஸ்ரேலிய படைகள் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காசாவில் வான்வழி தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ள இஸ்ரேல் ராணுவம் தெற்கு இஸ்ரேல் பகுதிகளில் தீ பிடிக்கும் வகையிலான பலூன்களை பறக்கவிட்டதாகவும், அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் காசா தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…