இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்..!காசாவில் 52,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வு- ஐ.நா தகவல்..!

Published by
Edison

இஸ்ரேல்-பாலஸ்தீனாவுக்கு இடையேயான மோதலில்,காசாவில் உள்ள 52,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாக மோதல் ஏற்பட்டு வருகிறது.அதில்,ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய குழுக்கள் காசாவிலிருந்து சுமார் 3,350 ராக்கெட்டுகளை வீசியதாகவும்,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் குறைந்தது 130 ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிகள் கொல்லப்பட்டதாகவும்,மேலும்,ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 15 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை தகர்க்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் 52,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மனித உரிமை ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (ஓஹெச்சிஏ) தெரிவித்துள்ளது.

மேலும்,இதுகுறித்து ஓஹெச்சிஏ அதிகாரிகளில் ஒருவரான ஜென்ஸ் லர்கே கூறியதாவது,”காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் இதுவரை 61 குழந்தைகள் உட்பட 200 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும்,47,000 பேர் காசாவில் ஐ.நா. நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் கோரி இடம்பெயர்ந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல்,இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் 132 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.மேலும்,316 கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.அதில் ஆறு மருத்துவமனைகள் மற்றும் ஒன்பது ஆரம்ப சுகாதார நிலையங்களும் அடங்கும்”,என்று கூறினார்.

இதற்கிடையில்,இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையிலான சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 57 நாடுகளின் அரசியல் முயற்சிகள் குறித்து காணொளி வாயிலாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில்,இஸ்ரேல்-பாலஸ்தீன அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

21 minutes ago

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

53 minutes ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

54 minutes ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

1 hour ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

18 hours ago