நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா,உக்ரனுக்குள் நுழைந்து கடந்த சில தினங்களாக உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.குறிப்பாக,தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியை குறி வைத்து மோசமான தாக்குதலை நடத்தி வருகிறது.
மேலும்,உக்ரைனின் பல பகுதிகளை முழுமையாக ரஷ்ய படைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
இதனிடையே இரு நாடுகளுக்கும் இடையே பெலாரசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தீர்வுகள் ஏதும் எட்டப்படாத நிலையில்,மேலும் இரண்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மனிதாபிமான முறையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதனையடுத்து,உக்ரைனில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால்,மறுபுறம் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில்,இரு நாடுகளுக்கும் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த பேச்சுவார்த்தை மூலமாவது இரு நாடுகளுக்கும் ரஷ்யபோர் முடிவுக்கு வருமா என்று உலக நாடுகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…