மாத இதழில் வந்த தவறான செய்தி குறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மாத இதழில் வந்த தவறான செய்தி குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் ” வார இதழ் ஒன்றில் என் பேட்டி ஒன்று வந்துள்ளது. நான் எப்போதும் வெளிப்படையாகவே பேசுவேன். என்னை பற்றியும், ‘நான் கடவுள் இல்லை’ என்கிற என் அடுத்த படத்தை பற்றி கேட்டிருந்தார்கள். விஜயகாந்த் பற்றி கேட்டிருந்தார்கள். எல்லாத்தையும் மனம் திறந்து சொல்லியிருந்தேன்.
அதேபோல், என் குடும்பத்தை பற்றி தவறான ஒன்றை – நான் சொல்லாத செய்தியை பதிவிட்டிருக்கிறார்கள். நானும் ஷோபாவும் விஜய் வீட்டுக்கு வெளியில் காரில் காத்திருந்ததாகவும், ஆனால் விஜய் ஷோபாவை மட்டும் உள்ளே வரச்சொன்னதாகவும், அதன் பின் நாங்கள் இருவருமே திரும்பி வந்துவிட்டதாகவும் ஒரு தவறான செய்து வந்துள்ளது. அது உண்மை அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன்..
எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை தற்போது இருப்பது உண்மை தான். அதை நான் மறுக்கவே மாட்டேன்… ஆனால், விஜய்க்கும், அவன் தாயுக்குமான அதாவது எனது மனைவி.. உறவு எப்போதும் போல நன்றாக தான் இருக்கிறது”. என கூறியுள்ளார்.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…