பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் வருகின்ற ஜனவரி மாதம் 8ஆம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெற்றியை கண்டது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது .
ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் அவர்களும் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களும் நடிக்கின்றனர்.மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது . அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருந்த இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடை செய்யப்பட்டு ரிலீஸ் தள்ளி போனது.
இந்த படத்திலிருந்து அதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்று சில தினங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்திருந்தனர். மேலும் அதனை தொடர்ந்து 21ம் தேதி அதாவது இன்று கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் அப்டேட் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் படக்குழுவினர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.
ஆம் கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் வருகின்ற ஜனவரி மாதம் 8ஆம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை ரசிகர்கள் ட்வீட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…