தலைவி படத்திற்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசு தொடர்ந்த வழக்கு.!

Published by
Ragi

தலைவி படத்திற்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தீபாவிற்கு தடை விதிக்க உரிமை இல்லை என்று ஏ.எல்.விஜய் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தலைவி.ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனாவும் , எம்ஜிஆர்-ஆக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர் . இதே போல் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து கௌதம் மேனன் குயின் என்ற வெப் தொடரை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ள தீபா ,சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கும் தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது .

அதில் இயக்குனர் ஏ எல் விஜய் மற்றும் விஷ்ணுவர்தன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு குறித்து கூறியதாவது, ‘தலைவி’ என்ற புத்தகத்தை தழுவியே தலைவி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.எனவே அதற்கான ஒப்புதலை தீபாவிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர் பொதுத் தளங்களில் வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் ஜெயலிதாவை நல்ல முறையில் மட்டுமே காட்டியுள்ளதாகவும் தெரிவித்தார் .மேலும் எதிர்கால தலைமுறையினர் ஜெயலலிதாவை நன்கு தெரிந்து கொள்ளும் வகையிலே எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் .
எனவே இந்த படத்திற்கு தடை கோர தீபாவுக்கு முடியாது என்றும்,அதற்கான உரிமையும் அவருக்கு இல்லை என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

அதன் பின் தீபா தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர் வாதிட்ட போது ,தலைவி படத்தினை திரையில் ரிலீஸ் செய்வதற்கு முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் இதற்கு இயக்குனர் விஜய் தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர், படத்தினை தணிக்கை குழு பார்த்து விட்டு தணிக்கை செய்யும் என்று தெரிவித்துள்ளார் .அதன் பின் இரு தரப்பினரின் வாதத்தை கேட்ட பின் வழக்கின் விசாரணையை தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Published by
Ragi

Recent Posts

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

2 minutes ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

7 minutes ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

33 minutes ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

34 minutes ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

51 minutes ago

”எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும்” – அதிபர் டிரம்ப் புலம்பல்.!

வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…

1 hour ago