தலைவி படத்திற்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசு தொடர்ந்த வழக்கு.!

Published by
Ragi

தலைவி படத்திற்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தீபாவிற்கு தடை விதிக்க உரிமை இல்லை என்று ஏ.எல்.விஜய் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தலைவி.ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனாவும் , எம்ஜிஆர்-ஆக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர் . இதே போல் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து கௌதம் மேனன் குயின் என்ற வெப் தொடரை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ள தீபா ,சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கும் தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது .

அதில் இயக்குனர் ஏ எல் விஜய் மற்றும் விஷ்ணுவர்தன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு குறித்து கூறியதாவது, ‘தலைவி’ என்ற புத்தகத்தை தழுவியே தலைவி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.எனவே அதற்கான ஒப்புதலை தீபாவிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர் பொதுத் தளங்களில் வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் ஜெயலிதாவை நல்ல முறையில் மட்டுமே காட்டியுள்ளதாகவும் தெரிவித்தார் .மேலும் எதிர்கால தலைமுறையினர் ஜெயலலிதாவை நன்கு தெரிந்து கொள்ளும் வகையிலே எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் .
எனவே இந்த படத்திற்கு தடை கோர தீபாவுக்கு முடியாது என்றும்,அதற்கான உரிமையும் அவருக்கு இல்லை என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

அதன் பின் தீபா தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர் வாதிட்ட போது ,தலைவி படத்தினை திரையில் ரிலீஸ் செய்வதற்கு முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் இதற்கு இயக்குனர் விஜய் தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர், படத்தினை தணிக்கை குழு பார்த்து விட்டு தணிக்கை செய்யும் என்று தெரிவித்துள்ளார் .அதன் பின் இரு தரப்பினரின் வாதத்தை கேட்ட பின் வழக்கின் விசாரணையை தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Published by
Ragi

Recent Posts

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…

32 minutes ago

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…

34 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…

1 hour ago

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

14 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

14 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

15 hours ago