தமிழ் சினிமாவை ஒதுக்கி வைத்துவிட்டு நிச்சயத்தை முடித்த கலகலப்பு-2 ஹீரோயின்.!

Published by
பால முருகன்

திரையுலகில் பிரபல நடிகர் நடிகைகள் காதலிப்பதும், திருமணம் செய்வதும் புதிதான ஒரு விஷயம் இல்லை. ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அதாவது வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் நடிகர் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள். சென்னையில் உள்ள நிக்கி கல்ராணி வசிக்கும் பில்டிங்கில் வைத்து இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாம்.

தமிழ் சினிமாவில் உள்ள யாரையும் அழைக்காமல் தெலுங்கு சினிமாவில் உள்ள நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து கோலாகலமாக ரகசிய முறையில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு ரசிகர்கள் தங்களத்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆதி மிருகம் திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுமானர். அந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், யாரையும் அழைக்காமல் நிச்சியத்தார்த்தம் நடத்தியது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், நிக்கி கல்ராணியின் அடுத்த தமிழ் நகைச்சுவை திரைப்படமான ‘இடியட்’ வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகிறது. ராம் பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் மிர்ச்சி சிவா, ஊர்வசி, அக்ஷரா கவுடா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, சிங்கமுத்து, ரவிமரியா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

4 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

4 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

12 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

12 hours ago