தீர்க்கசுமங்கலி பவ..என்று திருவருளும் காரடையான் நோன்பு இன்று!கட்டாயம் கடைபிடியுங்கள்

Published by
kavitha

கணவனோடு மகிழ்ச்சியாகவும், சுமங்கிலியாகவும் வாழவேண்டும் என்பது தான் மனைவியின் எகோபித்த எண்ணமாகும். காரடையான் நோன்பு   சுமங்கலிகளுக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை அளிப்பதற்காக ஏற்பட்டது.  மாசியும் பங்குனியும் கூடுகின்ற நேரத்தில் விரதம் இருப்பது தான் காரடையான் நோன்பு.

இவ்விரதத்தை மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பது வழக்கம். இந்த நோன்பை காமாட்சி நோன்பு என்றும்  கெளரி நோன்பு என்றும் சாவித்திரி விரதம் என்றும் கூறுவார்கள்.

திருமணமாகிய சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள்  விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். அது என்ன காரடை என்றால் கார்காலத்தில் விளைகின்ற நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். 

இந்நோன்பு இருந்தால் பிரிந்த தம்பதியர் கூட ஒன்றாக சேர்க்கும் வலிமை உண்டு.மேலும்  கணவரின் ஆயுளும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். சுமங்கலிப்பெண்கள் மட்டும் தான் இவ்விரத்தத்தை இருக்க வேண்டும் என்று இல்லை  திருமணம் ஆகாத பெண்களும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் அவ்வாறு கடைபிடித்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் நோன்பின் மிக முக்கியமான பலன் தீர்க்க சௌமாங்கல்யமாகும். இதை தான் எல்லாம்  பெண்களுக்கும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் அதனை பரிபூரணமாக அருளும் காரடையான் நோன்பினை எவ்வாறு கடைபிடிப்பது:

இன்று காலை 10.30 மணிக்கு மேல் ராகு காலம் முடிந்த  பின் மூலப்பொருள் முன்னின்று காக்கும் அந்த விநாயகரை வணங்கி பின் காமாக்ஷி தேவியை பிரார்த்தனை செய்து படத்தின் முன்னால் சிறிது இலை அல்லது தட்டு வைக்க வேண்டும்.அதில் அடை சிறிது வெண்ணை, வெற்றிலைப் பாக்கு மஞ்சள் கயிறுகளையும் அதில் வைக்க வேண்டும். ஒரு கயிற்றை அம்பாளின் படத்திற்கு சாத்திவிட்டு மற்றதைத் தான் அணிய வேண்டும். பின்னர் அம்பாளுக்கு நைவேத்யம் செய்ய வேண்டும்.  கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை முடிக்க வேண்டும்.காலை முதல் மாலை வரை விரதம் இருக்கும் பெண்கள்  சுமங்கலிக்கான ஸ்லோகங்களை படிப்பது நல்லது

Recent Posts

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 minutes ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

55 minutes ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

2 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

3 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

3 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

4 hours ago