Kung flu -கொரோனா வைரஸிற்கு பெயர் வைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

Published by
Venu

கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க அதிபர் தொடர்ந்து குற்றம்ச்சாட்டி வந்த நிலையில் தற்போது குங் காய்ச்சல் (Kung flu ) என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால், பெரும்பாலான நாடுகளில் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

சீனாவில் உள்ள உகான் நகரில்  தான் கொரோனா கண்டறியப்பட்டது என கூறப்பட்டு வருகிறது. ஆனால், சீனாதான் திட்டமிட்டு கொரோனவை உருவாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறார்.குறிப்பாக கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றும் கூறி வந்தார்.மேலும் உகான் வைரஸ் என்றும் கூறி வந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ்  பரவ ஆரம்பித்துவிட்டது.நோய்களின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் கொரோனா வைரஸிற்கு தான் அதிக பெயர்கள் உள்ளது.நானும் இதற்கு ஒரு பெயர் வைக்கிறேன்,குங் காய்ச்சல் (Kung flu ).குங் ஃபூ என்பது சீன தற்காப்புக் கலைகளைக் குறிக்கிறது. மக்கள்  இந்த கலையில்  சண்டையிட தங்கள் கைகளையும் கால்களையும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது மீண்டும் சர்ச்சையாக மாறியுள்ளது.

Published by
Venu

Recent Posts

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

7 minutes ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

35 minutes ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

47 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

1 hour ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

1 hour ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

2 hours ago