இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக வெளியிட்ட வீடியோ மற்றும் பதிவில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்ரா .இவர் சீரியலில் நடிப்பதற்காக தனது வருங்கால கணவரான ஹேம்நாத் உடன் சென்னை அருகிலுள்ள நாஙரேத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் .
இந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய படி சித்ராவின் சடலம் மீட்கப்பட்டது . போலீசார் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சித்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை சரண்யாவுடனான ஒரு அழகான வீடியோவை பகிர்ந்துள்ளார் . அதில் அவர் போன் பேசிய படி நிற்க சரண்யா மேடம் லவ் பண்ண ஆரம்பித்ததிலிருந்து ரொம்ப பிஸி என்று கூற சித்ரா தனது அழகான சிரிப்பை வெளிப்படுத்துகிறார் .அதே போன்று தனது அழகான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .இரவில் மகிழ்ச்சியாகவும், சிரித்து கொண்டும் இருந்த சித்ரா அதிகாலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .பல ரசிகர்கள் அவரது பதிவிற்கு பலர் தங்களால் இது ஏற்று கொள்ள முடியவில்லை,ஏன் இவ்வாறு செய்தார் என்று பல கேள்விகளையும் , தங்களது இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர் .
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…