மறைந்த சித்ராவின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு .! கண்ணீரில் ரசிகர்கள்.!

Published by
Ragi

இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக வெளியிட்ட வீடியோ மற்றும் பதிவில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்ரா .இவர் சீரியலில் நடிப்பதற்காக தனது வருங்கால கணவரான ஹேம்நாத் உடன் சென்னை அருகிலுள்ள நாஙரேத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் .

இந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய படி சித்ராவின் சடலம் மீட்கப்பட்டது . போலீசார் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சித்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை சரண்யாவுடனான ஒரு அழகான வீடியோவை பகிர்ந்துள்ளார் . அதில் அவர் போன் பேசிய படி நிற்க சரண்யா மேடம் லவ் பண்ண ஆரம்பித்ததிலிருந்து ரொம்ப பிஸி என்று கூற சித்ரா தனது அழகான சிரிப்பை வெளிப்படுத்துகிறார் .அதே போன்று தனது அழகான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .இரவில் மகிழ்ச்சியாகவும், சிரித்து கொண்டும் இருந்த சித்ரா அதிகாலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .பல ரசிகர்கள் அவரது பதிவிற்கு பலர் தங்களால் இது ஏற்று கொள்ள முடியவில்லை,ஏன் இவ்வாறு செய்தார் என்று பல கேள்விகளையும் , தங்களது இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர் .

 

 

Published by
Ragi

Recent Posts

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

51 minutes ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

1 hour ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

15 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

16 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

16 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

17 hours ago