தலைவர் தீபாவளி தான்… “அண்ணாத்த” திரைப்படத்தில் இத்தனை பாடல்களா…?

Published by
பால முருகன்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் 6 பாடல்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு இசையமைப்பாளராக இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது. அதற்கு பின்னர் டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, படப்பிடிப்பில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது காரணமாக முழுவதுமாக [படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வில் இருக்கிறார்.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு நடத்திக்கொள்ளலாம் என்று ரஜினி கூறியதாக தகவல்கள் வெளியானது. தற்போது “அண்ணாத்த” திரைப்படம் வரும் தீபாவளி நவம்பர் 4 2021 அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த 25 ஆம் தேதி அறிவித்தது இது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

இதனை தொடர்ந்து தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது என்பதை பற்றிய தகவல் கிடைத்துள்ளது. ஆம், அண்ணாத்த படத்தில் 6 பாடல்கள் உள்ளதாம். இதில் முதல் பாடலை பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். விரைவில் படத்திற்கான அடுத்த அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

10 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

11 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

12 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

12 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

13 hours ago