தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் . மாடலிங்கான இவர் ஒரு சில வெப் தொடர்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் படப்பிடிப்பு செல்வதாக கூறி கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து கிளம்பிய ஸ்ரீவத்சவ் அதன் பின் வீடு திரும்பவில்லை .இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் தேடிய போது அவர் படப்பிடிப்பிற்கு செல்வதாக கூறி சென்ற அன்று ஷூட்டிங் இல்லை என்பது தெரிய வந்தது . அதன் பின் அவரது குடும்பத்தினர் ஸ்ரீவத்சவ்வை தேடிய போது அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டிலிருந்து தூக்கில் தொங்கியப்படி பிணமாக மீட்கப்பட்டார் .
அந்த வீடு அவரது தந்தை பிசினஸிற்காக பயன்படுத்தி வந்ததாம் . மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.அதாவது கடந்த சில மாதங்களாக ஸ்ரீவத்சவ் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனுடன் இல்லாதது இருப்பதுபோலத்தோன்றும் ‘Hallucination’ என்ற பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன . கடந்த 3-ம் தேதி தூக்கிட்டு தொங்கிய அவரை 4-ம் தேதி சடலமாக மீட்டு நேற்று இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளது.சினிமாவில் பெரிய நடிகராக வலம் வர வேண்டிய ஸ்ரீவத்சவ் சிறு வயதிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…