மாதங்களில் மார்கழி மாதத்திற்கு தனிச்சிறப்புகள் உண்டு. அந்த மாதம் மார்கழி பீடு என கூறப்படுகிறது. ஆனால், சிலரோ மார்கழி மாதம் பீடை மாதம் அந்த மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது. நிலத்தில் எந்தவிதையையும் விதைக்கக்கூடாது என கூறி வருவர். ஆனால் மார்கழி மாதத்திற்கு உண்மையான பெயர் மார்கழி பீடு என்பதாகும். பீடு என்பதற்கு கம்பீரமான, தனி சிறப்புள்ள என பல பொருள் உள்ளது.
மார்கழி மாதத்தில் உயிர் உருவாகும் தன்மையானது மிகவும் குறைந்து காணப்படும். அதனால்தான் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என முன்னோர்கள் கூறிவந்தனர். அதேபோல, மார்கழி மாதம் மிகவும் குளிர்ந்த காலம் என்பதால், மண்ணில் போட்ட விதை முளைத்து வர தாமதமாகும். அதனால் விதைக்க கூடாது எனவும் கூறி வந்தனர். இதுதான் உண்மையான காரணம்.
மார்கழி மாதம் அதிகாலையில் வீட்டு பெண்கள் எழுந்து வீட்டு வாசலில் கோலம் போடுவதும், வீட்டில் உள்ள ஆண்கள் அதிகாலை எழுந்து ,குளித்து கோயில் செல்வதும் ஒரு வழக்கமாக இருந்து வந்தது. அதற்கு காரணம் மார்கழி மாதத்தில் அதிகமான ஆக்சிஜன் வாயு வெளியாகும்.
அதனை வீட்டில் உள்ள பெண்கள் சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதை வழக்கமாக வைத்தனர். அதேபோல, ஆண்களும் சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு பஜனைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
தற்காலத்தில் பலர் விடியும் முன்னரே அதாவது முந்தைய நாள் இரவே கோலம் போட்டு வைத்து விடுகின்றனர். அது தவறான விஷயமாகும். அதிகாலை 4 மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். அதுவே பெண்களுக்கு மிகுவும் நல்லது. அதேபோல அதிகாலையில் கடும் குளிரை எதிர்த்து குளிர்ந்த நீரில் குளித்து கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தால், அவர் வாழ்வில் வரும் எந்தவித இடர்பாடுகளையும் எதிர்த்து போராடி வாழ்வில் வெற்றி பெறுவதற்கு ஒரு உந்து சக்தியாக அமையும் எனவும் நம்பப்படுகிறது. இதுவே உண்மையான மார்கழி மாத சிறப்பியல்புகளாகும்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…