பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம்! பாகிஸ்தான் அரசு அதிரடி!

Published by
லீனா

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, ரசாயன முறையிலான ஆன்மீக தண்டனை அளிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

உலகம் எங்கிலும் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதற்காக பல நாடுகளில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானிலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயங்கரமான தண்டனை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமிகளின் துஷ்பிரயோகங்களுக்கு முன்மாதிரியான தண்டனை அளிக்கும் மூன்று அடுக்கு சட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து, ரசாயன முறையிலான ஆன்மீக தண்டனை அளிக்க சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பாலியல் சட்ட திருத்த வரைவு மசோதா தயார் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. முதலில் மசோதா தொடர்பான விவாதத்தில், அமைச்சர்கள் சிலர் , பாலியல் குற்றவாளிகளை நடுரோட்டில் தூக்கில் இடவேண்டும் என்று யோசனை தெரிவித்தனர்.

ஆனால் அந்த யோசனைகள் நிராகரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு ரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு இம்ரான்கான் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

7 minutes ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

19 hours ago