மெக்ஸிகோவில் உள்ள பேஷன் டிசைனர் ஒருவர்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் ஆடைகளில் கரடி பொம்மைகளை தயாரித்து வருகிறார்.
மெக்ஸிகன் மருத்துவமனைகள் பொதுவாக,அதிக அளவில் நிரம்பிய மருத்துவமனை வார்டுகள்,தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் தொற்று பரவுதல் போன்ற பயத்தினால் இறக்கும் நபரை பார்க்க குடும்ப உறுப்பினர்களையே அனுமதிக்காது.
இந்த நிலையில்,மெக்ஸிகோ ஆடை வடிவமைப்பாளர் இர்மா டி லா பர்ராவின் நீண்ட கால நண்பர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஜனவரி மாதம் இறந்தார்,இந்த சம்பவம் பர்ராவுக்கு உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இர்மா டி லா பர்ரா,கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் பல குடும்பங்களைப் பற்றி சிந்தித்து,அவர்களுக்கு முடிவில்லாத ஆறுதலை வழங்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.
அதன்படி,கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் துணிகளில் இருந்து கரடி பொம்மைகளை உருவாக்கி வருகிறார்.இதன்மூலமாக,கொரொனோ தொற்றால் இறந்தவர்களை அவர்களின் குடும்பங்கள் நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று இர்மா டி லா பர்ரா நம்புகிறார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…