மியான்மரில் ராணுவத்தினர் துப்பாக்கிசூடு.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 557-ஆக உயர்வு!

Published by
Surya

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய கட்சி வெற்றி பெற்றது. அவர்களின் ஆட்சியை ஏற்க ராணுவம் மறுத்ததை தொடர்ந்து, ராணுவத்திற்கும், மியான்மர் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

பின்னர் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை ராணுவ படையினர் வீட்டு காவலில் வைத்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ராணுவம் எச்சரித்தும், போராட்டம் நடைபெற்று வருவதால் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மோனிவா நகரப்பகுதிகளில் ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 3 பொதுமக்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ராணுவத்தினர், அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

4 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

4 hours ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

4 hours ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

6 hours ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

6 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

7 hours ago