அமைச்சரு.,க்கும்-‘முதல்’அமைச்சரு.,க்கும் முட்டா?? கசிகிறது தகவல்

Published by
kavitha

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவகாரத்தில்  அமைச்சர் கே.பி.அன்பழகன் நலம் குறித்து , முதல்வர் ஏன் விசாரிக்கவில்லை என்று கட்சியினர் கேள்வி எழுப்புவதாகவும் இது அகட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைநகர் சென்னையில் கொரோனா திவீரமாக பரவி வருகிறது தொற்றுநோயை கட்டுப்படுத்த  5 அமைச்சர்கள் கொண்ட குழுவை, முதல்வர் பழனிச்சாமி நியமித்தார். இந்தக்குழுவில், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்னையில் உள்ள அடையாறு, சோழிங்கநல்லுார் உட்பட, மூன்று மண்டலங்களில், நோய் தடுப்பு பணிகளை, ஒருங்கிணைக்கும் பணிகளி  ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த மாதத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு உடல் நலம் குன்றியது.

உடல் நல பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை நடந்தது.பரிசோதனையில் அமைச்சருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சரை எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்பு கொண்டு நல விசாரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் அன்பழகனுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள், முதல்வரிடம் கேட்ட போது, அதை அவரே மறுத்து விட்டார் என்று பதில் அளித்தார்.

இவ்வாறு இருக்க ஜூன் 30.,ந்தேதி, மியாட் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அமைச்சர் அன்பழகனுக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று  செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதன்பிறகும், அமைச்சரை தொடர்புகொண்டு முதல்வர்  நலம் விசாரிக்கவில்லையாம். முதல்வரின் நடவடிக்கை அமைச்சர் தரப்பினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.

ஏன்? இந்த கேள்வி கட்சினரிடையே என்றால் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகனுக்கும், கொரோனா தொற்று உறுதியானது இந்நிலையில் அவருடைய உடல் நலம் குறித்து முதல்வர், மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசினார். சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சென்று, சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.இவ்வாறு இருக்க உயர்கல்வித்துறை  அமைச்சர் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவரை முதல்வரோ, அமைச்சரோ கண்டுகொள்ளவில்லை.

இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டராக தகவல் வெளியாகியுள்ளது.இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம், எம்.எல்.ஏ.,க்கள் சதன் பிரபாகர், குமரகுரு ஆகியோர், கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பாதிக்கப்பட்ட அவர்களிடம், மொபைல் போனில் நலம் விசாரித்ததாக, முதல்வர் பழனிச்சாமி கூறியிருக்கிறார். ஆனால், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் குறித்த எந்த தகவலையும், அவர்  இதுவரை வெளியிடவில்லை.என்று அந்த தரப்பு  அதிருப்தி கூறி வருகிறது.

Recent Posts

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…

3 minutes ago

மருத்துவமனைக்கு ‘Jack Sparrow’ வேடத்தில் சென்று குழந்தைகளை மகிழ்வித்தார் ஜானி டெப்.!

ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…

1 hour ago

“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – அமித் ஷா.!

டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…

1 hour ago

“என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானவை” – அன்புமணி ராமதாஸ்.!

சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…

2 hours ago

”பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்”- அன்புமணி.!

சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…

2 hours ago

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…

3 hours ago