கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் முக்கிய நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில் இராக்குக்கு சொந்தமான போயிங் ரக விமானம் எறிந்த நிலையில் கீழே விழுந்து நொறுக்கியது. இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டாலும், பல அண்டை நாடுகள் ஈரான் மீது குற்றம்சாட்டினர், ஆனால் ஈரான் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் ஈரான் அரசு இறுதியாக அந்த விமான தாக்குதல் மனித தவறுகளின் காரணமாக வீழ்த்தப்பட்டது என உண்மையை ஏற்றுக்கொண்டது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவியது. பின்னர் எந்த நேரத்திலும் மோதல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவொரு போரும் ஏற்படவில்லை. இரு தரப்பிலும் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம், இரு நாடுகளின் தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறியும் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே பாதுகாக்கப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் அடுத்தடுத்து 5 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்தார். இது ஈரான் இஸ்லாமிய புரட்சி ராணுவத்தினர் இந்தத் தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு இராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இருநாடுகளின் தூதரக உறவைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இராக்கிடம் தெரிவித்துள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…