லிங்க்ட்இன் பயனர்கள் 700 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் விற்பனை – அறிக்கை..!

Published by
Edison

லிங்க்ட்இன் பயனர்கள் 700 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

லிங்க்ட்இன் பயனர்கள் 700 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கரால் திருடப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது, லிங்க்ட்இன் தளத்தில் 756 மில்லியன் பயனர்கள் இருப்பதால்,அதில் சுமார் 92 சதவீத லிங்க்ட்இன் பயனர்களின் தரவு ஹேக் செய்யப்படுள்ளதாகவும், அதில் அவர்களின் தொலைபேசி எண்கள்,முகவரிகள், இருப்பிடம் மற்றும் ஊகிக்கப்பட்ட சம்பளம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் தரவுகள் உள்ளன என்றும்,

கடந்த ஜூன் 22 அன்று,ஒரு மில்லியன் பயனர்களின் தரவுகளின் மாதிரியை ஆன்லைனில் ஹேக்கர் ஒருவர் விற்பனைக்கு வெளியிட்டுள்ளதாகவும்  அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,இதற்கு மறுப்பு தெரிவித்து லிங்க்ட்இன் தனது அறிக்கையில் கூறியதாவது:

“விற்பனைக்கு வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் சென்டர் தரவுகளின் தொகுப்பை எங்கள் குழுக்கள் விசாரித்தன.இது தரவு மீறல் அல்ல,மேலும், தனிப்பட்ட பயனர்களின் தரவு எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவாக கூற விரும்புகிறோம்.எங்கள் ஆரம்ப விசாரணையில் இந்தத் தரவு லிங்க்ட்இன் மற்றும் பிற பல்வேறு வலைத்தளங்களிலிருந்து ஸ்கிராப் செய்யப்பட்டது மற்றும் கடந்த ஏப்ரல் 2021 ஸ்கிராப்பிங் புதுப்பிப்பில் தெரிவிக்கப்பட்ட அதே தரவை இது உள்ளடக்கியது என்று கண்டறியப்பட்டுள்ளது.ஸ்கிராப்பிங் என்பது வலைத்தளங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுத்து அதனை நகலெடுக்க பயன்படுத்தும் முறையாகும்.

யாராவது பயனர்களின் தரவை எடுத்து தனிப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிக்கும்போது, லிங்க்ட்இன் மற்றும் எங்கள் உறுப்பினர்கள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை என்றால்,அதனைத் தடுத்து சம்மந்தப்பட்டவர்கள் அவற்றை பொறுப்பேற்க  நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

10 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

10 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

11 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

11 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

12 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

12 hours ago