நமது உடலுக்கு குறைந்தது 7 மணி நேரத் தூக்கம் அவசியம். இரவு சாப்பிட்டுவிட்டு காலை சாப்பாட்டுக்கு இடையில் நமது உடல் சுமார் 11 மணி நேரம் உணவின்றி இருக்கிறது. மீண்டும் காலை முதல் சுறுசுறுப்பாக இயங்க காலை உணவு இன்றியமையாதது. ஆனால், சிலரோ தங்கள் டயட் இருப்பதாக கூறி உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவுகளை சாப்பிடாமல் சென்று விடுகின்றனர். சிலர் வேலைக்கு நேரமாகிவிட்டது என்று காலை உணவை தவிர்த்து விடுகின்றனர்.
காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். அதனால், நமது உடலுக்கு தேவையில்லாத பல பிரச்சனைகள் வரும். அதில் முதலில் பாதிக்கப்படுவது நமது இருதயம். காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பதால் இதய கோளாறு ஏற்பட்டு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டு. உயர் ரத்த அழுத்தம் உண்டாகும் அபாயம் இருக்கிறது.
காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பதால் பெண்களுக்கு நீரிழிவு நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ ஆய்வு கூறுகின்றன.
காலை உணவை தவிர்ப்பதால் எடை குறையும் என நினைத்தால் அது உங்கள் அறியாமை. காலை உணவை தவிர்ப்பதால் எடைகூடும். அதாவது, காலை உணவை தவிர்ப்பதால் நமது உடலில் பசியின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆதலால், மதிய இடைவேளையில் நாம் எப்போதும் சாப்பிடும் அளவிற்கு அதிகமாகவே சாப்பிடுவோம். அதனால் நமது உடலில் தேவையில்லாத கலோரிகள் அதிகரித்து உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காலை நாம் சுறுசுறுப்புடன் செயல்பட காலை உணவு அவசியம். அதனை தவிர்ப்பதால் மூளைக்கு சரியான சத்துகள் செல்லாமல், அதன் செயல்திறன் குறைவு ஏற்பட்டு நமது அன்றைய செயல் சோம்பேறித்தனமாக மாறிவிடுகிறது.
காலை உணவை தவிர்ப்பதால் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. மேலும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை மிகவும் பாதிக்கிறது.
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…