என் வாழ்க்கையில் தாய், தந்தை, அண்ணன், எல்லாமே பாலசந்தர் தான்.!

Published by
Ragi

மறைந்த கே. பாலசந்தரின்  90வது பிறந்தநாளான இன்று ரஜினிகாந்த் அவர்கள் எத்தனையோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த பெரிய மகான் என்று கூறி அவருடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநரான கே. பாலசந்தர் அவர்களுக்கு இன்று 90வது பிறந்தநாளாகும். சர்வர் சுந்தரம், ஆபூர்வ ராகங்கள் , அவள் ஒரு தொடர்கதை உள்ளிட்ட ஏராளமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர். இவருக்கு 9 தேசிய விருதுகள் உட்பட பத்மஸ்ரீ, தாதாசாகிப் பால்கே ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது. இவர் கடந்த 2014ல் டிசம்பர் 23ம் தேதி இயற்கை எய்தினார். அவரின் 90வது பிறந்தநாளான இன்று, பல பிரபலங்கள் அவருடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவை கே. பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா தனது யூடுபில் வெளியிட்டுள்ளது.

கே. பாலசந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர். அவர் கே. பாலசந்தர் குறித்து கூறியதாவது, என் குருநாதரான கே. பாலசந்தர் சாருக்கு இன்று 90வது பிறந்தநாளாகும். அவர் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், கன்னட சினிமாவில் வில்லனாகவோ, சின்ன கதாபாத்திரத்திலும் நடித்து சின்ன நடிகராக இருந்திருப்பேன் நான் இன்றும் பேரும், புகழோடும், நல்ல வசதிகளுடன் வாழ்வதற்கு காரணம்  கே. பாலசந்தர் தான் என்றும், என்னை தேர்ந்தெடுத்து பெயர் வைத்ததோடு எனது மைனஸை கண்டறிந்து எனது பிளஸ் என்ன என்பதை எனக்கு காட்டி தந்தவர். எனது அப்பா, அம்மா, அண்ணாவை அடுத்து தெய்வமாக கருதுபவர் கே. பாலசந்தர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கே. பாலசந்தர் அவர்கள் தனக்கு மட்டுமில்லாமல் எத்தனையோ நடிகை, நடிகர்களை அறிமுகப்படுத்தி வாழ்க்கை கொடுத்திருக்கிறார். அவரால் வாழ்ந்தவர்கள் பலர். நான் இந்தி உட்பட பல இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன். ஆனால் டெக்னீசியன் ஆரம்பித்து நடிகர், நடிகைகள் மற்றும் லைட் மேன் உட்பட பலர் கே. பாலசந்தர் அரங்கினுள் வந்தாலே எழுந்து நின்று வணக்கம் வைப்பார்கள். அவ்வளவு கம்பீரமானவர். அவர் மனித ஜென்மம் எடுத்து வந்து உலகத்திலுள்ள அனைத்து கடமைகளையும் சரிவர செய்துவிட்டு காலமாகிவிட்டார். எத்தனையோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த பெரிய மகான். அவரது 90வது பிறந்தநாளான இன்று கே. பி சாரை நினைவுபடுத்தி கொள்வதில் மகிழ்ச்சி என்றும், அவரது ஆத்மா நிம்மதியாக சாந்தியடைய வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

15 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

16 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

17 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

17 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

19 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

20 hours ago