யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி.
கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில், முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019-இல் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி நிறுவப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இரவு திடீரென்று நினைவு ஸ்தூபி இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்கலைக்கழகத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, தமிழர்கள் பகுதியில் போராட்டம் வெடித்த நிலையில், நினைவு ஸ்தூபியை மீண்டும் அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து ஜனவரி 11-ஆம் தேதி அதே இடத்தில் புதிதாக முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபியை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…