யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி…!

Published by
லீனா

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி. 

கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில், முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019-இல் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி நிறுவப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இரவு திடீரென்று நினைவு ஸ்தூபி இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்கலைக்கழகத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து, தமிழர்கள் பகுதியில் போராட்டம் வெடித்த  நிலையில், நினைவு ஸ்தூபியை மீண்டும் அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதனையடுத்து ஜனவரி 11-ஆம் தேதி அதே இடத்தில் புதிதாக முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபியை  அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

14 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

15 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

16 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

17 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

18 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

19 hours ago