முரசொலி மூலப்பத்திரம்..தேசிய பட்டியலின ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவு

Published by
kavitha

முரசொலி நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் பிப்., 28ம்தேதி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையில் அமைந்துள்ள முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று கூறி பாஜகவை சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்தப் புகார் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேசிய பட்டியலின ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையத்தின் துணை தலைவர் முருகன் உத்தரவிட்டி இருந்தார்.

இந்நிலையில் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க கோரி முரசொலி அறக்கட்டளை சார்பில்  மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பட்டியலின ஆணைய துணை தலைவர் முருகன் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.மேலும் மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை முரசொலி நிலம் குறித்த மூலப்பத்திரத்திரம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும்  நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் தேசிய பட்டியலின ஆணைய தலைவரை  வழக்கில் இணைத்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக வரும் 28ஆம் தேதி ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Recent Posts

#FactCheck : நாளை பொதுவிடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பா? விளக்கம் கொடுத்த அரசு!

#FactCheck : நாளை பொதுவிடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பா? விளக்கம் கொடுத்த அரசு!

சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…

2 hours ago

“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி அவர் தான்”..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…

2 hours ago

நாயகனை மிஞ்சியதா “தக் லைஃப்”! நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்கள் என்ன?

சென்னை : நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 32 -வருடங்களுக்கு…

3 hours ago

ஐபிஎல் ஓவர்…இன்று முதல் தொடங்குகிறது TNPL!

கோவை : ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 9-ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர்…

4 hours ago

தீரா சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்…மன வேதனையில் விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர்.…

6 hours ago

முடிவுக்கு வருமா மோதல்? ராமதாஸை சந்திக்க தோட்டத்திற்கு செல்லும் அன்புமணி!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில்…

6 hours ago