ட்விட்டரில் “Edit” ஆப்ஷன் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்- ட்விட்டர் அதிரடி!

Published by
Surya

மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் ட்விட்டரில் “எடிட்” ஆப்ஷனை வழங்கவுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.

தற்போதுள்ள காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக், போன்ற சமூக வலைத்தளங்கலில் மக்கள் அதிமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ட்விட்டரில் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் பல பயனுள்ள அப்டேட்களை வழங்கி வந்தாலும், பெரும்பாலான மக்கள், ட்விட்டரில் “எடிட்” ஆப்ஷனை கொண்டுவருமாறு பல வருடங்களாக கோரிக்கை வைத்துள்ளார்.

ட்விட்டரில் நீங்கள் ஒரு பதிவை பதிவிட்ட பிறகு, அதில் ஒரு சிறிய தவறு இருந்ததாக அறிந்தால், அந்த பதிவை டெலீட் செய்து புதிதாய் மற்றொரு பதிவை பதிவிட முடியுமே தவிர, அதனை எடிட் செய்யமுடியாது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டது.

அதில், அனைவரும் முகக்கவசம் அணிந்தால், ட்விட்டரில் “எடிட்” ஆப்ஷன் வழங்கப்படும் என தெரிவித்தது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பொதுமக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ட்விட்டர் நிறுவனம் இந்த முதுவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

12 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

13 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

14 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

14 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

15 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

15 hours ago