நேபாளமும் சீனாவும் புதியதாக உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கண்டறிந்ததில் 8848.86 மீட்டர் நீளம் கொண்டது என தெரியவந்துள்ளது.
உலகின் மிக உயரமான சிகரமாகிய எவரெஸ்ட் சிகரம் இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 200 மீட்டர் அதாவது 30 ஆயிரத்து 200 அடி இருக்கும் என கூறப்பட்டது. இந்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீட்டர் என 1954 இல் இந்தியாவின் கணக்கெடுப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டின் பேரழிவு மற்றும் அப்போது ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என அண்மையில் விவாதங்கள் எழுந்தது.
இதனை அடுத்து இந்த எவரெஸ்ட் மலையின் உயரத்தை துல்லியமாக அளவிட நேபாள அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, தற்போது துல்லியமாக எவரெஸ்ட் சிகரம் 8848.86 மீட்டர் உள்ளது என தெரிவித்துள்ளது. இந்தியாவின் முந்தைய கணக்கீட்டை பார்க்கையில் தற்போது நேபாளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அளவீடு 86 சென்டிமீட்டர் அதிகமாக உள்ளது. இறுதியாக தற்பொழுது எவரெஸ்ட் சிகரம் 8848.86 மீட்டர் உயரத்தில் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…