மோகன்லாலின் பிரமாண்ட படத்தினை குறித்த புதிய தகவல்.!

Published by
Ragi

நடிகர் மோகன்லாலின் பிரமாண்ட படத்தினை குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. 

மலையாள சினிமாவின் கிரான்ட் மாஸ்டர் தான் மோகன்லால். இவருக்கென்று ரசிகர் பட்டாளம் நிறையவே உண்டு. இவர் தற்போது பிரமாண்ட திரைப்படமான மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 100கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். ஆஷிர்வாத் சினிமாஸ் பேனர்ஸின் கீழ் ஆண்டனி பெரும்பாவூர் இந்த படத்தை தயாரிக்கிறார். கேரளாவில் 16ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற மாலுமி குஞ்சாலி மரக்கார் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மோகன்லாலின் இளம் பருவத்தை பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். பிரணவ்க்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன் சர்ஜா, நெடுமுடி வேணு, இன்னசென்ட், சுஹாசினி, முகேஷ் மற்றும் பல வெளிநாட்டு நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவரும் இந்த படம் இந்தி மொழியிலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படம் மார்ச் 28ல் உலகம் முழுவதும் உள்ள  5000 திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் திடீரென பரவிய கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டன. இதுவரை ஊரடங்கால்  மலையாள சினிமாவிற்கு 600 கோடி வரை  இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   தியேட்டர்கள் திறக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் ஆகும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இயக்குநர் பிரியதர்ஷன் நேரலை ஒன்றில் படத்தை வெளியிடுவதில் எந்த அவசரமும் இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

15 minutes ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

1 hour ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

1 hour ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

2 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

3 hours ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

4 hours ago