SimCard [FILE IMAGE]
இந்திய தகவல் தொடர்பு துறையான DoT (Department of Telecommunications) போலி சிம்கார்டுகள் மூலமாக நடக்கும் மோசடி குற்றங்களைத் தடுக்கும் வகையில், புதிய சிம் கார்டு விதிமுறைகளை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்த புதிய விதிமுறை டிசம்பர் 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதில் சிம் கார்டுகளின் மொத்த விற்பனையைத் தடை செய்தல், பாயின்ட் ஆஃப் சேல் (PoS) உரிமையாளரின் கட்டாயப் பதிவு மற்றும் சிம் கார்டு வாங்கும் நபரின் விவரங்களைப் பதிவு செய்தல் போன்ற விதிகள் உட்பட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
செல்போன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மட்டுமே சிம் கார்டுகளை விற்பனை செய்ய முடியும். சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, சேவை நிறுவனங்கள் தங்களிடம் இருந்து சிம் கார்டுகளை வாங்கும் விற்பனையாளரின் முழு விவரங்களை ஆய்வு செய்து, அவர்களுடன் ஒப்பந்த செய்து கொள்ள வேண்டும்.
இது போல ஒப்பந்தம் செய்யாமல் சிம் கார்டுகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. மேலும், விற்பனையாளர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர்களின் லைசென்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும்.
புதிய சிம் கார்டுகளை வாங்கும் வாடிக்கையார்களின் தகவல்களை இ-கேஒய்சி (KYC) முறையில் பதிவு செய்ய வேண்டும். இது புதிய சிம் வாங்குபவருக்கும் ஏற்கனவே உள்ள எண்ணில் புதிய சிம் கார்டை வாங்குபவருக்கும் பொருந்தும்.
இதற்கு சிம் கார்டு வாங்கும் நபரின் ஆதார் கார்டு அவசியம். அதோடு ஒரு மொபைல் எண் இணைப்பு துண்டிக்கப்பட்டால், 90 நாட்களுக்குப் பிறகுதான் அந்த எண் மற்றொரு நபருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க சிம் கார்டுகளின் மொத்த விற்பனையை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. ஆனால் வணிகத் தேவைக்காக அதிக எண்ணிக்கையில் சிம் காடுகள் வழங்கப்படும். ஒரு தனி நபருக்கு அதிகபட்சமாக ஒன்பது சிம் கார்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கவும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக 70 லட்சம் மொபைல் எண்களை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…