சீனாவில் புதிய வகை வைரஸ்: மீண்டும் முழு ஊரடங்கு..!

Published by
murugan

சாங்சுனில் புதிய வகை  கொரோனா:

உலகளவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா அதிகரித்துள்ளன. சீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுனில் புதிய வகை  கொரோனா பரவி வருகிறது. 90 லட்சம் பேருக்கு மேல் மக்கள் வசிக்கும் சாங்சுன், ஜில்லின் மாகாணங்களில் கொரோனா அதிகரிப்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சாங்சுன் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சீன அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

முழு ஊரடங்கு அமல்: 

சீனாவின் வட கிழக்கு நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 255 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு நகரமான சாங்சுனில்  ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,194 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சாங்சுன் உள்ளிட்ட வட கிழக்கு சீன நகரங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதிவிரைவு ஆண்டிஜன் பரிசோதனை:

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிவிரைவு ஆண்டிஜன் பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா பாதிப்பை துல்லியமாக கண்டறிய அதிவிரைவு ஆண்டிஜன் பரிசோதனை முதல் முறையாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

 

Recent Posts

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

51 minutes ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

1 hour ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

4 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

4 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

5 hours ago