வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார்.
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு புகைப்பிடிக்கும் வழக்கம் மற்றும் உடல்பருமனால் இதய நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 12ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் கிம் ஜாங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த 15ம் தேதியன்று வடகொரியாவின் தந்தை மற்றும் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனையடுத்து அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து ஏராளமான வதந்திகள் பரவியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் “வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை தொடர்பான தகவல்கள் வதந்தி என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…