அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட 500 பேர்! சங்கிலியால் கட்டிபோட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் கொடுமை!

Published by
மணிகண்டன்

நைஜீரியா நாட்டில் ஒரு கட்டிடத்தில் சுமார் 500 பேர் அடிமைகளாக அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு வந்துள்ளனர். அவர்களை தற்போது அந்நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.

அதாவது குர்ரான் சொல்லித் தருவதாக கூறி, அதற்கு தனி பள்ளிக்கூடம் இருக்கிறது அங்கே கூட்டி செல்கிறேன் என்று கூறி நைஜீரிய நாட்டில் உள்ள காடுனா எனும் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு அந்த கட்டிடத்தின் அடைத்துவைத்து சங்கிலியால் கட்டி பட்டினி போட்டுள்ளனர். அதில் பலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளனர். இதனை அதிகாரிகள் கண்டறிந்து அந்த இடத்திற்கு விரைந்து அடிமைகளாக இருந்த 500 பேரையும் மீட்டனர்.

அதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் உள்ளனர். மேலும், குர்ரான் சொல்லி தருவதாக கூறிய பள்ளி அங்கு இருந்ததற்கான அடையாளம் அங்கு இல்லை. இது மனிதர்களை அடிமைப்படுத்தும் கொடுமையான செயல் என மீட்டெடுத்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

8 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

8 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

9 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

9 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

10 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

11 hours ago