180 பயணிகளுடன் சென்ற நைஜீரிய கப்பல் கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி, 156 பேர் மாயம்!

Published by
Rebekal

நைஜீரிய நாட்டின் வடமேற்கு கெப்பி மாநிலத்தில் இருந்து 180 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில், 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 156 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரிய நாட்டின் வடகிழக்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலா நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக படகு ஒன்று 180 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. படகு புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். மேலும் 20 பேர் மீட்கப்பட்டு நிலையில், படகில் இருந்த 156 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய உள்நாட்டு நீர்வழி அமைப்பின் பகுதி செயலாளர் யூசுப் அவர்கள், படகில் அதிக அளவில் பயணிகள் ஏற்பட்டுள்ளதால், படகு பலவீனமடைந்து தான் கவிழ்ந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே பயணிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு நாங்கள் கூறிய அறிவுரையை அவர்கள் கேட்கவில்லை எனவும், படகில் 30 பஜாஜ் மோட்டார் சைக்கிள்களும் இந்த பயணிகளுடன் ஏற்றப்பட்டு இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இன்னும் மீட்பு பணி தொடர்ந்து வருவதாகவும் ,20 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் 156 பேரில் பலர் நீருக்கு அடியில் மூழ்கி இருக்கலாம் என கூறப்படுவதாகும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

3 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

4 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

5 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

6 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

6 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

9 hours ago