இயக்குனர் ராம் அடுத்ததாக நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்.
இயக்குனர் ராம் தமிழ் சினிமாவில் பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டப்படமாக இருக்கும். இந்த நிலையில் நீண்டகாலமாக படம் எடுக்காமல் இருந்த ராம் தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். ஆம் அவர் இயக்கும் அடுத்த படத்திற்கான கதையை முதன் முதலாக நடிகர் சிம்புவிடம் கூறியதாகவும், சிம்பு ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தது.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் ராம் நடிகர் நிவின் பாலியிடம் கதையை கூறியதாகவும், அந்த கதை நிவின் பாலிக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகவுள்ளது. மேலும் கண்டிப்பாக இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைப்பது மட்டும் உறுதி. மேலும் இயக்குனர் ராமின் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…