நாம் சரியாக இருந்தாலும் சில நேரங்களில் நமது நேரம் சரியாக இருக்காது. நாம் சாலை விதிகளை கடைபிடித்து சென்றாலும் எதிரே வரும் வாகனம் அதேபோல் வரும் என்று சொல்லிவிட முடியாது. அதனால் எந்த நேரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்திலேயே வாழ்க்கையில் அடுத்த அடிகளை வைக்க முடியாது. எல்லா நேரங்களிலும் நம்மை காக்க இந்த ஒரு வரி மந்திரம் போதும். முதலில் இந்த 1 வரி மந்திரத்திற்கு சக்தி அளிக்க வேண்டும். அதனால் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி அமர்ந்து 1008 முறை இந்த மந்திரத்தை வாயால் உச்சரிக்க வேண்டும். இதனால் இந்த மந்திரம் சக்தி அடையும். பின்னர் தினமும் நீங்கள் காலை எழுந்தவுடன் 3 முறையோ அல்லது 11 முறையோ என ஒற்றைப்படை கணக்கில் உச்சரித்து கொள்ளலாம். இந்த 1 வரி மந்திரம் இதோ:
ஓம் ஜூம் சக, சக ஜூம் ஓம்.
இந்த மந்திரத்தை நீங்கள் வெளியே செல்லும் முன், உங்களது வாகனத்தை எடுக்கும் முன், அல்லது நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் முன் என எப்போது வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். உச்சரித்த பின்னர் உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் ஏற்பட்டுவிடும். இது உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும். இது ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலும் உங்களுக்கு அவ்விடத்தில் சரியான வழியை ஏற்படுத்தும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…