இனிமேல் சிம்புவின் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

Published by
Rebekal

இனிமேல் சிம்புவின் படங்களுக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிக்க போவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து தற்போது வெளியாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அதாவது ஏற்கனவே அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு சிம்பு பதில் சொல்ல வேண்டும் என புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கொரில்லா படத்தின் தயாரிப்பாளரும் அட்வான்ஸ் வாங்கி விட்டு சிம்பு படம் நடிக்காமல் சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளாராம்.

ஏற்கனவே இந்த பிரச்சினைகள் நிலுவையில் உள்ள நிலையில் இது தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது பெரும் பூகம்பமாக கிளம்பியுள்ளது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி அவர்களின் கோரிக்கையை ஏற்று சிம்புவின் ஈஸ்வரன் படம் ரிலீஸ் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இனிமேல் சிம்புவின் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க போவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 hour ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago