தீபாவளிக்கு புது படங்கள் ரீலீஸ் இல்லை- தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா.!

Published by
Ragi

தீபாவளிக்கு புது படங்கள் ரீலீஸ் செய்யப்பட மாட்டாது என்று இயக்குனரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது . அதனையடுத்து சமீபத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி 50% இருக்கைகளுடன் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது . அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் படத்தின் வசூலில் 50% -ஐ அளித்தால் விபிஎப் கட்டணத்தை கைவிடுவதாக அறிவித்தனர் .

இந்த விபிஎப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்த தொடர்ந்து நடந்து வந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்ளவில்லை என்றும், எனவே விபிஎப் கட்டணம் குறித்து முடிவு வரும் வரை புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்றும் , எனவே அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களது புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும்படி இயக்குநரும்,  தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா அறிக்கையை வெளியிட்டு தெரிவிதீதிருந்தார் .

அதனை தொடர்ந்தும் பலமுறை இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்ததாகவும், எனவே தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகாது என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார் .  எனவே தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த பிஸ்கோத், களத்தில் சந்திப்போம், எம்ஜிஆர் மகன் ஆகிய படங்கள் வெளியாகாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பபட்டுள்ளதும், பழைய மெகா ஹிட் படங்களை திரையிட உள்ளதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

3 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

3 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

4 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

5 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

6 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

6 hours ago