பாதுகாப்பு இல்லை : ஆப்கான் மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சம்…!

Published by
Rebekal

தலிபான்கள் ஆட்சியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆப்கான் மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வந்தனர். தற்போதும் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அந்நாட்டின் மகளிர் கால்பந்து அணியினர் தற்போது பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இது குறித்து மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் கூறுகையில், தலிபான்களின் முந்தைய ஆட்சியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததாகவும், எனவே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதும் பல வீராங்கனைகள் நாட்டை விட்டு வெளியேற தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்குள் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த கால்பந்து அணி வீராங்கனைகளை பாகிஸ்தான் நாட்டு கால்பந்து சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்றனர். இன்னும் சில நாட்களில் இவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு விரைவில் அகதிகள் அந்தஸ்து வழங்கப்படும் எனவும் பாகிஸ்தான் கால்பந்து சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

6 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

6 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

8 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

9 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

9 hours ago