தென் கொரியாவுடன் தொடர்புகொள்ள உதவும் கேசோங் தொடர்பு அலுவலகத்தை, வட கொரியா வெடிவைத்துத் தகர்த்துள்ளது.
வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பதற்றம் உருவாகியுள்ள நிலையில், வடகொரியாவில் இருந்து தப்பிய சிலர் தங்களுக்கு எதிராக தென் கொரியாவில் இருந்து துண்டுப் பிரசுரங்கள் அனுப்பி வருவதாக வடகொரியா குற்றம் சாட்டியது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்களை அனுப்புவதாக வடகொரியா கூறியது. இதனால், வடகொரிய அதிபர் தங்கை கிம் யோ ஜோங், தென் கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
மேலும், எல்லையில் உள்ள தகவல் தொடர்பு அலுவலகத்தை மூடப்போவதாகவும் கூறினார். கடந்த வாரம் வடகொரியா ,தென் கொரியாவுடனான அனைத்துத் தொடர்புகளையும் நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில், கேசோங் பகுதியில் மூடப்பட்டு இருந்த இருநாட்டு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் 2018-ம் ஆண்டு நிறுவப்பட்ட தொடர்பு அலுவலகத்தை வட கொரியா வெடிவைத்துத் தகர்த்துள்ளது.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…